தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் கன மழை பெய்து வருகிறது. அதாவது தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன்படி விருதுநகர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.