வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. இந்த புயல் இன்று காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்க இருக்கிறது. இதன் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் 40 கிலோ மீட்டர் பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருக்கிறது. புறநகர்  பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்குகிறது.

இந்நிலையில் இன்று காலை 10 மணி வரையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் காலை  10:00 மணி வரையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.