கன்னட திரை உலகில் பிரபலமான இயக்குனராக வலம் வந்த கிரண் கோவி திடீர் மாரடைப்பால் காலமானார். இவர் கன்னட திரை உலகின் டைனமிக் இயக்குனராக அறியப்பட்டவர். இவர் பயான், சஞ்சாரி, யாரி குண்டு போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் இவரின் மரணம் தற்போது திரையுலகில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் கிரண் கோவியின் மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.