
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அருவியில் குளித்து செல்கின்றனர். நேற்று குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த போது சுற்றுலா பயணி ஒருவரின் கையை பாம்பு சுற்றி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த மற்ற பயணிகள் அச்சத்தில் அலறியடுத்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
ஆனால் அந்த நபர் பயமே இல்லாமல் அந்த பாம்பை மெதுவாக கையில் இருந்து எடுத்து அருவி ஓடையில் வீசினார். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது. குற்றால அருவிக்கரை பகுதியில் மின்விநியோகம் துண்டிக்கப்படாதவாறு மாற்று ஏற்பாடுகளை செய்ய சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.