தைவான் நாட்டில் அதிபர் சாய் இங் வென் தலைமையிலான குடியரசின் ஆட்சியில் நடந்து வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல புதிய அறிவிப்புகள் வெளியான உள்ளது. அதன்படி தைவான் நாட்டிற்கு சுற்றுலாவிற்கு வரும் 5 லட்சம் பயணிகளுக்கு பணம் அல்லது ஊக்கத்தொகை வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி இந்த வருடம் மொத்தம் 60 லட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும் இந்த எண்ணிக்கையை வரும் ஆண்டுகளில் அதிகப்படுத்தவும் முடிவு எடுத்துள்ளது. சுற்றுலா வரும் ஐந்து லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு 13 ஆயிரத்து 600 ரூபாய் பணமாக வழங்க உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்ததுள்ளனர்.