ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சட்டவிரோதமாக எந்த ஒரு பொருளையும் கொண்டு செல்லக்கூடாது. அப்படி செய்தால் அவர்கள் விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார்கள். அதன்படி அமெரிக்காவின் நியூயார்க்கில் பயணி ஒருவர் பாம்புகளை கடத்துவதற்கு முயற்சி செய்துள்ளார். இதற்காக சிறிய பாம்புகளை ஒரு பையில் வைத்து அதனை தன்னுடைய பேன்ட் பைக்குள் கேஷுவலாக வைத்துள்ளார்.

இந்த சம்பவம் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் நடந்துள்ளது. இவரை பாது காவலர்கள் சரியாக சோதனை செய்யாமல் விட்டுள்ளனர். இதனால் அவர் பல அடுக்கு பாதுகாப்பை கடந்து விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்த நேரத்தில் கண்காணிப்பு கேமராவில் பார்த்து சந்தேகித்துள்ளனர். இதனை தொடர்ந்து உடனடியாக அவரை பிடித்து அதிகாரிகள் மீண்டும் அவரிடம் தீவிர சோதனை நடத்தினர். அவரது பேண்ட் பைக்குள் இருந்த சிறிய பையை பிரித்துப் பார்த்த போது சிறிய பாம்புகள் இருந்து வெளியே ஓடியது. இது அனைவரையும் அதிர்ச்சியில் வாழ்த்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.