உத்தர் பிரதேச மாநிலம் லக்ஹிம்பூர் பகுதியில் சேர்ந்த நபர் இஷு வர்மா. இவர்  ஒரு இளம்பெண்  மீது சந்தேகம் கொண்டு அவரது மொபைலை எடுத்து வைத்துக் கொண்டதோடு சரமாரியாக தாக்கும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அந்த காணொளியில் வரும் வர்மா அந்த பெண்ணை சரமாரியாக தாக்குகின்றார். அந்தப் பெண் தனது கைபேசியை கேட்ட பிறகும் கொடுக்காமல் பெல்ட் கொண்டு கடுமையாக தாக்கியுள்ளார்.

இது தொடர்பான காணொளி வெளியானதை தொடர்ந்து  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வர்மாவை கைது செய்துள்ளனர். மேலும் காணொளியை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டவர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.