செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது இஷாக். இவர் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார் இவரின் மூத்த மகன் வஜாகத் 15 வயதான இவர் தனியார் பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சிலர் தினங்களுக்கு முன்பாக மாணவர்களுக்கான திறன் வளர்ச்சி போட்டியில் கலந்து கொண்டு இரண்டு சாதனைகளை படைத்துள்ளார். அதில் முதல் சாதனையாக ஆறு வகையான ரூபிக் க்யூப் இணைத்துக் கொண்டே 160 திருக்குறளை ஏழு நிமிடம் 41 நொடியில் உச்சரித்துள்ளார்.

மற்றொரு சாதனையாக 1330 திருக்குறளை 11 மணி 36 நிமிடத்தில் 133 ஓலையில் பேனா மூலமாக தொடர்ந்து எழுதி சாதனை படைத்துள்ளார் இது குறித்த அவர் கூறுகையில் நான் இரண்டு சாதனைகளை நிகழ்த்துவதற்கு என்னுடைய பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்ததால் தான் முடிந்தது. இன்னும் பல உலக சாதனைகளை நிகழ்த்தி தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பது தான் என்னுடைய லட்சியம் என்று கூறியிருக்கிறார்.