இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் பயணிகளின் வசதிக்காக பல அறிவிப்புகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. பண்டிகை நாட்கள் மட்டும் கோடை விடுமுறையின் போது பயணிகளுக்கு மிகுந்த நிம்மதியை அளிக்கும் விதமாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில் நிலையத்தில் பயணிகள் தங்குவதற்கான வசதியும் உள்ளது. பெரும்பாலான பயணிகளுக்கு இது தெரியாமல் ஹோட்டல் அறைகளில் அதிக வாடகை கொடுத்து தங்குகின்றனர்.

இந்திய ரயில்வேயில் பயணம் செய்யும்போது ரயில் நிலையத்தில் தங்க வேண்டும் என்றால் ரயில் நிலையத்தில் உங்களுக்கு அறை கிடைக்கும். ஏசி அறைகள் மற்றும் ஹோட்டல் அறையை போலவே உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இங்கு கிடைக்கும். ஒரே இரவில் அறை முன்பதிவு கட்டணம் நூறு ரூபாய் முதல் 700 ரூபாய் வரை இருக்கலாம். இதற்கு முதலில் ஐ ஆர் சி டி சி கணக்கு தொடங்கி உள் நுழைந்து மை புக்கிங் என்ற விருப்பத்திற்கு சென்று உங்கள் டிக்கெட் முன்பதிவு கீழே retiring room என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் அறையை முன் பதிவு செய்து கொள்ளலாம். பணம் செலுத்திய உடன் உங்கள் அறை முன்பதிவு செய்யப்படும்.