புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய பெருமக்களுக்காக பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்குகிறது தமிழக அரசு. அந்த வகையில் இந்த ஆண்டும் 7,040 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இதனால் அரசுக்கு 26 கோடியே 81 லட்ச ரூபாய் செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோன்பு கடைபிடிக்கும் அனைத்து நாட்களிலும் பள்ளிவாசல்களில் பச்சரிசி வழங்கப்படும்.