தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சூர்யாவின் நடிப்பில் ஜெய்பீம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பை பெற்றது. கடந்த 2021-ம் ஆண்டு ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் இருளர் மக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அதிகார வர்க்கத்தினை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி பல அரசியல் தலைவர்கள் மத்தியிலும் பாராட்டை பெற்றது.

இந்த படம் தொடர்பாக பல விவாதங்களும் நடைபெற்ற நிலையில், சூர்யாவின் 2டி நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. இந்நிலையில் சூர்யாவின் நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் தற்போது புத்தகமாக வெளிவர இருக்கிறது. இந்த புத்தகம் சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சியை முன்னிட்டு விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த தகவலை நடிகர் சூர்யா தன்னுடைய வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.