பொதுவாக ஒரு விலங்கிற்கும் மற்றொரு விலங்கிற்கும் இடையே பல வித்தியாசம் காணப்படும். ஆனால் சில சமயங்களில் அவர்கள் தங்கள் இனப் பகையை மறந்து மற்ற விலங்குகளுடன் நட்பு கொள்வதைக் காண்கிறோம். மனிதர்களை போல உயிரினங்களும் ஒன்றுக்கொன்று அன்பு செலுத்தி வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. இப்படியான அன்பை பரிமாறிக் கொள்வதில் இருக்கும் சுகமே தனி. அதனை உணரும்போது உங்களுக்குள் இருக்கும் பரவசத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

அப்படியான பரவசத்தை உணர வைக்கும் வகையிலான வீடியோக்கள் இப்போது இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.  அப்படி ஒரு சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குட்டி குரங்கை பூனை ஒன்று தூக்கி செல்வதை இந்த வீடியோவில் பார்க்கலாம். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து நெட்டிசன்கள் பலரும் குரங்கு குட்டியை பூனை தத்தெடுத்ததாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.