ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக திமுக கட்சியின் அமைச்சர்களும் ஈரோடு கிழக்கில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பழனிவேல் தியாகராஜன் தவிர அனைத்து அமைச்சர்களும் ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பள்ளி மாணவர்களின் தப்பாட்டம், சிலம்பாட்டம், சுருள் போன்ற விளையாட்டுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டு களித்தார். மேலும் மாணவர்களுடன் சேர்ந்து பறையடித்தும் அமைச்சர் அன்பில் மகேஷ் மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.