உள்ளாடை திருடிய விவகாரத்தில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் 30 வயது பெண் ஒருவரின் உள்ளாடை காணாமல் போயுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அந்த பெண் சிசிடிவி கேமராவை ஆராய்ந்துள்ளனர். அப்போது உள்ளாடையை பக்கத்துக்கு வீட்டு பெண் திருடுவது CCTV கேமரா மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து இரு பெண்ணுக்கும் இடையே ஆரம்பித்த சண்டை பெரிய கலவரமானது. இதில் இரண்டு குடும்பத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக 20க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உள்ளாடைக்காக ஏற்பட்ட சண்டையால் பெரிய கலவரம் உண்டாகி காவல் நிலையம் வரை சென்ற சம்பவம் அப்பகுதியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.