சமீப காலமாகவே வயது வித்தியாசமின்றி  இளம் வயதினர் அதிகமாக மாரடைப்பால் இறப்பது அதிகரித்தவண்ணம் உள்ளது. இதை செய்தியாகவே நாம் பார்த்து வருகின்றோம். அந்தவகையில் கர்நாடகாவை சேர்ந்த 24 வயது நாடக கலைஞர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் மேடையில் பெண் ஒருவருடன் இணைந்து நடித்துக் கொண்டிருந்தபோதே சுருண்டு விழுந்தார்.  அருகில் இருந்தவர்கள் இவரை மருத்துவமனையில் அனுமதித்தபோது இவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவரது மரணம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.