இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்தடுத்து புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகின்றது. அதன்படி சந்திரன் மூன்று விண்கலத்தின் மூலம் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கி மிகப்பெரிய சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து அக்டோபர் 21ஆம் தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.