சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதனால் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தென்கொரியா, அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் கட்டாய கொரோனா பரிசோதனை போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த சீனா சில நாடுகள் சீன பயணிகளை மட்டும் குறி வைத்து கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

மேலும் பரஸ்பர கொள்கை அடிப்படையில் சீனா எதிர் நடவடிக்கைகளை எடுக்க முடியும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தென் கொரியாவில் உள்ள சீன தூதரகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “தென்கொரியா சீன பயணிகள் மீதான பாரபட்சமான நடவடிக்கைகளை நீக்கும் வரை அந்த நாட்டில் இருந்து சீனாவிற்கு சுற்றுலா மற்றும் வணிகத்திற்காக வருபவர்களுக்குரிய விசா நிறுத்தி வைக்கப்படும்” என தெரிவித்துள்ளது.