ஜனவரி 15 நாளை மறுநாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை அன்று சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் சைதாப்பேட்டை, கள்ளிகுப்பம், புளியந்தோப்பு, வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் அரசு உத்தரவுப்படி இறைச்சி கடைகள் மூட இருக்கிறது.

இந்த உத்தரவை செயல்படுத்த இறைச்சி கடை வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.