தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் நாளை வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் 18ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இந்த இரவு 10:00 மணி வரையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது