தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் வாரிசு திரைப்படத்தை அடுத்து தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். அதன்பின் அரசியலில் இறங்க உள்ளதால் நடிப்பிற்கு 6 பிரேக் விட இருப்பதாக தகவல் வெளியாகின.

அதோடு 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மார்க் எடுத்த 1,500 மாணவர்களை விஜய் நேரில் சந்திக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து 12-ஆம் வகுப்பில் 600/600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினி மற்றும் அப்பா இறந்த நிலையிலும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி கிரிஜா உள்ளிட்டவருக்கு தளபதி சிறப்பு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவ்விஷயம் இணையத்தில் வைரலான நிலையில், பலரும் தளபதி விஜய்யின் முடிவை பாராட்டி வருகின்றனர்.