மேற்கு வங்க மாநிலத்தில் முர்ஷிதாபாத் என்ற பகுதி உள்ளது. இங்கு கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீபனந்து ஹல்தர், சுபோஜித் ஹல்தர் ஆகிய இருவரை கைது செய்தனர். இதில் தீபனந்து சம்பவ நாளில் அந்த சிறுமிக்கு பூ வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் ஒரு இடத்திற்கு அழைத்து சென்று அந்த சிறுமியை எவ்வாறு பாலியல் பலாத்காரம் செய்துள்ள நிலையில் இதற்கு சுபோஜித் உடந்தை. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி குற்றவாளி ஆன தீபனந்துவுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது. மற்றொரு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. முன்னதாக ஆயுத பூஜை அன்று சிறுமிக்கு பூ வாங்கி கொடுத்து கற்பழித்துள்ளார். அந்த சிறுமி இறந்த பின்னரும் சடலத்துடன் அவர் உடலுறவு வைத்துள்ளார். மேலும் இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார். இதே போன்று கடந்த 6-ம் பத்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.