
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊதியூர் பகுதியில் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளியில் சிவக்குமார் என்பவர் ஆசிரியராக வேலை பார்க்கிறார். அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு சிவக்குமார் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமையை யாரிடமும் கூறாமல் இருந்தார். ஆனால் பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு சென்றபோது தனக்கு நடந்த கொடுமைகளை உறவினர்களிடம் கூறி அழுதார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி மகளிர் காவல் நிலையம் போலீசார் பள்ளியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சட்டத்தின் கீழ் சிவகுமாரை கைது செய்து விசாரணை வருகின்றனர்.