
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே ஐஜி ஏ.ஜி. பாபு ஆய்வு நடத்தினார். வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த நான்கு மாத சிசு உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் அனைத்து எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே ஐஜி ஏ.ஜி. பாபு ஆய்வு நடத்தினார். அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். பாதுகாப்பான ரயில் பயணம் தொடர்பாக பெண்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.