
யூயுடூப்மூலம் பிரபலமான ராப் பாடகர் வேடன். இவர் கேரளாவை சேர்ந்த திருச்சூர் பகுதியில் வசித்து வருபவர். இவர் இலங்கைத் தமிழரான தாய்க்கும், கேரளாவைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் பிறந்தவர். இவரது உண்மையான பெயர் ஹிரந்தாஸ் முரளி என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மஞ்சும்மல் பாய்ஸ், ஆல் தி இமேஜின் ஆஸ் லைட் உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களிலும் பாடியுள்ளார். சமீபத்தில் சேரன் நடிப்பில் வெளியான நரி வேட்டை படத்தில் பழங்குடியினரின் வாழ்க்கை முறை பற்றி ஒரு பாடலை எழுதி பாடியிருந்தார். இதனைத் தொடர்ந்து இவரது பாடல்கள் இந்து மதத்தையும், பிரதமர் மோடியையும் அவமதிப்பது போல் இருப்பதாக பாஜகவினர் புகார் அளித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ராப் பாடகர் வேடனிடம் வீடியோ கால் மூலம் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், திருமாவளவன் ராப் பாடகர் வேடனிடம் அவர்களது பெற்றோர் குறித்து நலம் விசாரித்தார்.
பின்னர் அவரது பாடல்கள் அனைத்தும் புரட்சிகரமாக இருப்பதாகவும், பாடலின் கருத்துக்கள் மிகவும் நன்றாக இருப்பதாகவும் பாராட்டுகளை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் நாங்க கிட்டத்தட்ட 35 வருடங்களாக அரசியலில் பேசிய விஷயங்களை நீங்க 2 நிமிட பாடலில் தெளிவா சொல்லிட்டீங்க என திருமாவளவன் கூறினார். அதற்கு பதில் அளித்த வேடன் கூறியதாவது, ஐயா நீங்க பேசுனதுனால தான் பாடுவதற்கான தைரியமே எங்களுக்கு கிடைச்சது என கூறினார்.