
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அனுபாமா பரமேஸ்வரன். இவர் தமிழில் தள்ளி போகாதே, கொடி மற்றும் சைரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது தெலுங்கில் நடித்துள்ள டில்லு ஸ்க்வேயர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகை அனுபாமா முத்தக் காட்சியில் நடித்ததற்கு பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதற்கு நடிகை அனுபாமா நான் முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் மற்றும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று சொன்னது என்னுடைய 18 வயதில். இப்போது எனக்கு முதிர்ச்சி வந்து விட்டதால் கதைக்கு தேவை என்றால் அது போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா நடைபெற்ற நிலையில் நடிகை அனுபாமா மேடைக்கு பேச சென்றார். அப்போது ரசிகர்கள் பலரும் நீங்கள் பேச வேண்டாம் என கூச்சலிட்டனர். இதனால் அவர் பேசலாமா வேண்டாமா என கேட்டார். அதற்கு ரசிகர்கள் வேண்டாம் என்று கூறியதால் சிலருக்கு நன்றி கூறிவிட்டு அங்கிருந்து சோகமாக சென்றுவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்களின் செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் ஒரு நடிகையை இப்படி மேடையில் அவமானப்படுத்துவது சரி இல்லை என்றும் கூறி வருகிறார்கள்.
I did really feel bad for @anupamahere
here !! 😑😑It’s her event which she had to share her happiness on the success but these people over there were so rude that they didn’t allow/want her to talk!!
Despite all these still #Anupama was so sweet,she thanked NTR and spoke so… pic.twitter.com/Rt4LK2WTo3
— Vamc Krishna (@lyf_a_zindagii) April 9, 2024