உத்தரப் பிரதேசத்தின் அமேதியில் (Amethi), ஒரு தாய் தனது 15 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்புணர்வு (Alleged Rape) செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு மதபோதகரை (Maulana) சாட்டையால் சரமாரியாகத் தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், அந்த மதபோதகர் மாஃபிக் கேட்டு கைகளைக் கூப்பிப் பணிந்துள்ளார்.
வீடியோவில், அந்தப் பெண் இரண்டு நிமிடங்களுக்குள் மதபோதகரைச் 11 முறை சாட்டையால் தாக்குகிறார். அப்போது, “நீ எனது 15 வயது மகளின் வாயில் துணியை வைத்துப் பாலியல் வன்புணர்வு செய்தாய்.
अमेठी में एक महिला द्वारा –
मदरसे के मौलाना को कमरे में कोड़े से पीटने का वीडियो हुआ वायरल।आरोप है कि –
उसकी 15 वर्षीय बेटी कथित यौन शोषण/ दुष्कर्म का शिकार हुई है। महिला का कहना है कि बच्ची के मुंह में कपड़ा ठूसकर गलत काम किया गया। जिसका उसके पास प्रूफ है। pic.twitter.com/TDIpcrXlwl— NCIB Headquarters (@NCIBHQ) December 4, 2025
என்னிடம் ஆதாரம் உள்ளது. நீ உனதுக் குற்றத்தை ஒப்புக்கொள், இல்லை என்றால் நான் உன்னைக் கொன்றுவிடுவேன்” என்று ஆவேசமாகக் கத்துகிறார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மதரஸா ஆசான் ஹசீப் மீதுச் சுல்தான்பூர் எஸ்.பி-க்குச் சமூக ஊடகங்கள் வழியாக முறைப்படியானப் புகார் அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது, போலீசார் இந்தச் சம்பவம் குறித்த நபர்கள் மற்றும் இடத்தை உறுதி செய்த பின்னரே முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படும் என்றுத் தெரிவித்துள்ளனர்.
