தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியின் நாகர்கோவிலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வருகை தந்தபோது, அங்கிருந்த ஒரு குட்டிச் சிறுமியின் திறமையைக் கண்டு வியந்து போன சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு கோமதம் வீரராகவன் கிரிஜா என்பவரைச் சந்தித்த பிரதமர், அங்குள்ள மாணவர்களுடனும் கலந்துரையாடினார். அப்போது கிரிஜா என்ற அந்தச் சிறுமி, பிரதமரின் முன்னிலையில் எவ்வித அச்சமும் இன்றி மிகத் தெளிவாகச் ‘சரஸ்வதி வந்தனம்’ மற்றும் ‘காயத்ரி மந்திரத்தை’ உச்சரித்த விதம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

 

சிறுமியின் தெளிவான உச்சரிப்பையும், தன்னம்பிக்கையையும் பார்த்த பிரதமர் மோடி, முகம் மலர அந்த மந்திரங்களை உன்னிப்பாகக் கவனித்தார். சிறுமி மந்திரங்களைச் சொல்லி முடித்ததும், “வெரி குட்!”, “வா!” எனப் பாராட்டி அந்தச் சிறுமியை உற்சாகப்படுத்தினார்.

நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் இளைய தலைமுறையினர் எப்படிக் கற்று வருகிறார்கள் என்பதைப் பிரதமர் ஆர்வத்துடன் கேட்டறிந்தார். இந்தப் ‘பியூர்’ மற்றும் அர்த்தமுள்ள வீடியோவை நெட்டிசன்கள் இதயங்களைக் குவித்து பகிர்ந்து வருகின்றனர்.

“பிரதமராக இருந்தாலும் குழந்தைகளின் திறமையை அங்கீகரிப்பதில் அவர் காட்டும் அன்பு நெகிழ்ச்சி அளிக்கிறது” எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.