உலக அளவில் விளைவு உயர்ந்த வீடு மற்றும் கார் போன்றவைகள் இருப்பது போன்று விலை உயர்ந்த தண்ணீரும் இருக்கிறது. அதாவது விலை உயர்ந்த தண்ணீர் பாட்டில் என்று கடந்த 2010-ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. உலகின் விலை உயர்ந்த தண்ணீர் என aquatic di crystallo tributo a Modigliani என பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்ந்த தண்ணீரின் விலை 44 லட்ச ரூபாயாகும். இந்த விலை உயர்ந்த தண்ணீர் 24 கேரட் சுத்தமான தங்க பாட்டிலில் பேக்கேஜ் செய்யப்படுகிறது. இந்த பாட்டிலில் 750 மில்லி தண்ணீர் இருக்கும். இந்த தண்ணீரில் 5 கிராம் 24 கேரட் தங்கமும் கலந்திருக்கும் என்பதால் பணக்காரர்கள் இந்த தண்ணீரை வாங்கி குடிப்பது ஆடம்பரம் என கருதுகிறார்கள்.

இந்த தண்ணீரில் மற்றொரு சிறப்பும் இருக்கிறது. அதாவது உலகின் மூன்று இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தண்ணீரின் கலவை தான் பாட்டிலில் அடைத்து வைக்கப்படுகிறது. அதாவது பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு நீருற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர், பிஜி நாட்டில் உள்ள ஒரு நீரூற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர், ஐஸ்லாந்தில் பனிக்கட்டி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் ஆகிய மூன்றும் கலந்து பாட்டிலில் வைக்கப்படுகிறது. இந்த தண்ணீர் மிகவும் சுத்தமாகவும் இருக்கும். மேலும் உலகின் மூன்று இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் மற்றும் தங்கத்தில் பேக்கேஜ் போன்ற காரணங்களுக்காக தான் 44 லட்ச ரூபாய்க்கு தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது.