
உலக தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1996-ஆம் ஆண்டு அனைத்து உலக தொலைக்காட்சி கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஐக்கிய நாடுகள் நவம்பர் 21-ஆம் நாளை உலக தொலைக்காட்சி நாளாக அறிவித்தது. இந்த கருத்தரங்கில் தொலைக்காட்சியின் முக்கியத்துவம் குறித்து பேசப்பட்டது.
உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள், கலை கலாச்சார நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியின் வாயிலாக பரிமாறிக் கொள்ள இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1997-ஆம் ஆண்டு முதல் முதல் தொலைக்காட்சி நாள் கொண்டாடப்பட்டது. கடந்த 1959-ஆம் ஆண்டு தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இந்திய கலாச்சாரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லை. விளம்பரங்கள் நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளுக்கான ஊடகமாக தொலைக்காட்சி இருக்கிறது. கடந்த 1950-களிலிருந்து மக்கள் கருத்தை உருவாக்குவதில் தொலைக்காட்சி பெரும் பங்கு வகிக்கிறது. இந்த காலகட்டத்தில் இணைய தொலைக்காட்சி என இணையம் வாயிலாக தொலைக்காட்சி காணக்கூடிய வசதி இருக்கிறது. சக்தி வாய்ந்த மக்களை கவர்ந்து இழுக்கும் சாதனமாக தொலைக்காட்சி அமைந்துள்ளது.