சமூக வலைதளங்களில் ஒரு கடையில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வீடியோவில், கணவன்- மனைவி இருவர் ஒரு கடையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு பெண் திடீரென அந்த கணவரை உரசியவாறே அவரது  தனிப்பட்ட உறுப்புகளை தகாத முறையில் தொட்டுள்ளார்.

இதனை கவனித்த அந்த ஆணின் மனைவி சட்டென அந்தப் பெண்ணை இழுத்து அடித்து கீழே தள்ளுகிறார். சில வினாடிகளில் தனது கணவருக்கும் ஒரு அறை விடுகிறார். அதன் பின் அந்தப் பெண்ணை மீண்டும் ஒருமுறை கடுமையாக தாக்குகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சமூகப் பயனர்கள் இடையே கலவையான கருத்துக்களை பெற்று வருகிறது. இந்த சம்பவம் பொது இடங்களில் ஏற்படும் ஒழுக்க கேடுகளான விஷயங்களைக் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.