இங்கிலாந்தில் பாலிமெனா நகரில் வசித்து வந்த பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உறவினர்கள் பலரும் கடந்த 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த வழக்கில் வெளிநாட்டைச் சேர்ந்த 3 சிறுவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை அடுத்து புலம்பெயர் தொழிலாளர்களின் வீடுகள், அலுவலகங்களை போராட்டக்காரர்கள் தீவைத்து கொளுத்தியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் ஈடுபட்டபோது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அந்த மோதலில் 40க்கும் மேற்பட்ட காவல்துறையினர் படுகாயம் அடைந்துள்ளனர். எனவே கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக கண்ணீர் புகை குண்டு வீசி போராட்டக்காரர்களை காவல்துறையினர் விரட்டியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.