ஒவ்வொரு வருடமும் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட நான்கு வகையான டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றது. இதில் மிக உயர்ந்ததாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இன்று தொடங்கப்பட்டு 16ஆம் தேதி வரை லண்டனில் வைத்து நடைபெறுகிறது. இதனால் இத்தொடரில் பங்கேற்க இருக்கும் முன்னணி வீரர்கள் வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போட்டிக்கான பரிசுத்தொகை 464 கோடி ரூபாய் எனவும் இது போன வருடத்தை விட 11.2% அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பரிசுத் தொகை ஒற்றையர் பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு தலா 241/2 கோடியும் இரண்டாவது இடத்தை பிடிப்பவர்களுக்கு 12 1/4 கோடியுமாக பிரித்துக் கொடுக்கப்படும். அதேபோன்று இரட்டையர் பிரிவில் வெற்றி பெறும் ஜோடிக்கு 6 1/4 கோடி பரிசுத்தொகை என்று கூறப்பட்டுள்ளது.