
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றி திரியும் நிலையில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் சந்தகுன்னு, முக்கட்டி, பிதிர்காடு போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து பொதுமக்களின் வீடுகள் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தி வருகிறது.
அதோடு கூடலூர், சுல்தான்பத்தேரி, பந்தலூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் வழியில் யானைகள் சாலைகளில் நின்று கொண்டு வாகனங்களை செல்ல விடாமல் வழிமறித்து பயமுறுத்துகிறது. அதோடு சந்தகுன்னு கொண்ட பகுதியில் வசித்து வந்த ஜோய் (60) என்பவர் காட்டு யானை தாக்கியதால் உயிரிழந்துள்ளார்.
அந்த காட்டு யானைகள் அப்பகுதியை சுற்றியுள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. மேலும் அப்பகுதி மக்கள் காட்டு யானையை விரட்டுவது தொடர்பாக வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.