கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதுபேயனபள்ளி கிராமத்தில் விவசாயியான சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 10 ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. மேலும் 5 ஆடுகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆடுகளையும் மர்ம விலங்கின் கால் தடத்தையும் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.