ஹைதராபாத்தில் 40 வயது மென்பொருள் ஊழியர் ஒருவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த நபர் சனிக்கிழமை இரவு 30 வயதிற்குட்பட்ட தனது மனைவியையும், மூன்று முதல் 11 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளையும் சேர்த்து கொன்றதாக கூறப்படுகிறது.

இந்த கொடூரமான செயலைத் தொடர்ந்து, அவர் அவர்களின் குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிலிர்க்க வைக்கும் காட்சியை விட்டுச்சென்றார். காவல்துறையினரின் கூற்றுப்படி, அந்த நபர் தனது உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முன், மாஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள தனது பெற்றோருக்கு ஒருஅதிர்ச்சிதரும் செய்தியை அனுப்பியுள்ளார்.

அச்செய்தியில், ஆன்லைன் பந்தயம் காரணமாக கணிசமான நிதி இழப்புகளை சந்தித்ததாக விளக்கினார், இதுதான் தற்கொலைக்கு காரணம் என்று கூறியிருந்தார். அதனைக் கண்டு பதற்றமடைந்த அந்த நபரின் பெற்றோர், உடனடியாக உள்ளூர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.

அதன்படி காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபரின் தொலைபேசியில் ஒரு செல்ஃபி வீடியோ கண்டுபிடிக்கப்பட்டது. அதில் அவர் தனது நிதி சிக்கல்கள் மற்றும் அவர் அந்த செயலி மூலம் பணம் இழந்து துன்பப்பட்டதை, மற்றும் கடன் நெருக்கடி குறித்தும் விவரித்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.