கனடாவில் போர்ட் செவன் பனிப்பிரதேசத்தில் தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தங்களது வீட்டில் நாய்களையும் வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவ நாளன்று வளர்ப்பு நாய்கள் வெளியே சென்று வீடு திரும்பாததால் நாய்களைத் தேடி வெளியே தம்பதியினர் இருவரும் சென்றுள்ளனர். இப்போது அங்கிருந்த கரடி ஒன்று எதிர்பாராத விதமாக பெண் மீது பாய்ந்து தாக்கியது. உடனே அந்தப் பெண்ணின் கணவர் கரடி மீது பாய்ந்து மனைவியை கரடியிடமிருந்து மீட்க முயற்சித்தார்.

இதனால் கரடி அவரை கடித்து காயப்படுத்தியது. இதில் அவரது கை, கால்களில் அதிகமாக காயம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கரடியை அங்கிருந்து விரட்டினார்.இதனால்  பயந்து கரடி தப்பி ஓடியது. காயமடைந்த தம்பதியினரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.