இன்டர்நேஷனல் டி ஸ்ட்ராஸ்பேர்க்கில் நடந்த ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில், அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் டேனியல் காலின்ஸ், பிரிட்டனின் எம்மா ராடுகானுவை 4-6, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் கடுமையாகப் போராடி வெற்றிபெற்றார். ஆரம்பத்தில் ராடுகானு செட்டை கைப்பற்றிய போதும், அதற்குப் பிறகு காலின்ஸ் தனது ஆட்டம் மூலம் ஆதிக்கம் செலுத்தி மீண்டும் போட்டியில் திரும்பினார். இந்த வெற்றி மூலம் காலின்ஸ் காலிறுதிக்கு முன்னேறினார்.

 

இந்த போட்டியின் இரண்டாவது செட்டின் போது, ஒரு கேமராமேன் செய்த சம்பவம் பெரும் கவனத்தை பெற்றது. தண்ணீர் குடிக்க சென்ற காலின்ஸ், தன்னை மற்றும் எம்மா ராடுகானுவை ஒரு கேமராமேன் மிகவும் நெருக்கமாக படம் பிடிக்க வந்ததைக் கவனித்தார்.

இது அவரது அசௌகரியத்தை ஏற்படுத்த, அவர் நேரடியாக அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும், “நீங்கள் என்னை இந்த அளவுக்கு நெருக்கமாக வந்து படம் பிடிக்க வேண்டிய அவசியமில்லை, எம்மா ராடுகானுவின் மேல் இருக்க வேண்டியதுமில்லை. இது மிகவும் பொருத்தமற்றது.” எனக் கூறி கடுமையாக எச்சரித்தார். அச்சமயம், ராடுகானு முதுகு காயத்திற்காக சிகிச்சை பெறுவதற்காக நேரம் கேட்டிருந்தார்.

இந்த இடையூறு இருந்தபோதிலும், காலின்ஸ் தனது கவனத்தையும், ஆட்டநிலையையும் தக்கவைத்து, இரண்டாவது செட்டில் ஆதிக்கம் செலுத்தினார். மூன்றாவது மற்றும் இறுதி செட்டிலும் அவர் தனது சீரான ஆட்டத்தால் வெற்றி பெற்றார். இந்த வெற்றியுடன், அவர் ஜெசிகா பெகுலா அல்லது அன்னா கலின்ஸ்காயா ஆகியோரில் ஒருவரை எதிர்கொள்ள உள்ளார். போட்டியிலும், அவரது தைரியமும், நேர்மையான எதிர்வினையும் பாராட்டுக்கு உரியது என ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.