இந்திய அளவில் ஒரு காலத்தில் பாலிவுட் படங்கள் தான் பிரபலம் என்று இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி தென்னிந்திய சினிமா படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தென்னிந்திய சினிமாவில் இருந்து உருவான பாகுபலி, ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜி னஎஃப் போன்ற படங்கள் வட இந்திய ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகர் யார் என்றாலும் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி பாகுபலி படத்தில் நடித்து பிரபலமான பிரபாஸ் தான் அதிக சம்பளம் பெறும் நடிகராக இருக்கிறார். இவர் ஒரு படத்திற்கு 150 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் என்று கூறப்படுகிறது.