உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இது ஒரு பக்கம் பயனர்களுக்கு சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் மோசடிகளும் நடைபெறுகின்றன. மோசடியாளர்கள் தற்போது வாட்ஸ் அப்பில் அதிகம் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர்.

அவர்களின் சதியில் சிக்கி ஏமாறாமல் இருக்க whatsapp பயன்படுத்துபவர்கள் அனைவரும் இதனை பின்பற்றுங்கள்.

தெரியாத எண்ணில் இருந்து அழைப்புகள் வந்தால் முடிந்தவரை எடுக்க வேண்டாம். தனிப்பட்ட தகவல்களை யாருக்கு வழங்குகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். சந்தேகத்திற்குரிய லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். மோசடியாளர்கள் நம்பர்களை பிளாக் செய்வதோடு வாட்ஸப்பில் புகார் அளிக்கலாம்.