சமூக வலைதளங்களில் இப்போது ஒரு வீடியோ புரியாத புதிர் போல பரவி வருகிறது. ‘எல்லாம் கண்ணின் மாயை, கைதிறமும் கம்ப்யூட்டர் தந்திரமும் தான்’ என்று பெரியவர்கள் சொல்வதற்கு இதுவே ஓர் உறுதி.
Twitter-ல் @JaikyYadav16 என்ற யூசர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளதோடு, “இப்ப தான் புரியுது, இவர்கள் எவ்வளவு தந்திரமாக நம்மை மோசடி பண்ணிருக்காங்க” என கேப்ஷனில் எழுதிருக்கிறார்.
இந்த வீடியோவில் ஒருவர் மேஜிக் ட்ரிக்ஸ் செய்வது போன்று பெண்களை அசரவைக்கும் வகையில் ஆடம்பரமான செயல்கள் செய்கிறார் – கண்ணுக்கு தெரியாமல் தண்ணீர் நிறம் மாறுவது, பந்து மறைவது, தாஸ் பேட்டுகளை மாயம் செய்வது என பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் இதற்கு பின்னால், ஒரு கேமரா மூலமாக பதிவு செய்யப்பட்ட காட்சி எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டு விடுகிறது.
आज ये वीडियो देखकर समझ आया कि आजतक ये जादूगर उल्लू बनाते रहे😃😂
— Jaiky Yadav (@JaikyYadav16) September 22, 2025
இது போன்ற ட்ரிக்ஸை எப்படி ஜாலியாக,செய்கிறார்கள் என்பதையே அந்த வீடியோ புலப்படுத்துகிறது. மூன்று லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் இதுவரை வீடியோவை பார்த்துள்ளனர்.
சுமார் 2,000 பேர் லைக்க்ஸ் கொடுத்துள்ளனர். குழந்தை பருவத்தில் பார்த்த மந்திரகாரர்கள், அந்த ஞாபகம் எப்படி இருந்தது என்பதை கமெண்ட்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே சிலர் இந்த மேஜீஷியன்களின் கைதிறனையும் பாராட்டுகின்றனர் – “இவர்கள் எப்படி இவ்வளவு சீக்கிரம், நொடியில் நம் கவனத்தை மாற்றுகிறார்கள்?” என தற்போது வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
