சென்னையில் கடந்த ஜூன் 25ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது, “மதுரையில் நடந்தது முருக பக்தர்கள் மாநாடே இல்ல. அது மோடியோட பக்தர்கள் மாநாடு. உண்மையாகவே முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டு இருந்தால் தமிழக மக்கள் அதனை பெரிதும் மதித்திருப்பர்.

மேலும் பெரியார் அண்ணா போன்ற தலைவர்களை விமர்சிக்கும் வீடியோ ஒளிபரப்பப்பட்டு இருக்காது. அதிலும் அந்த மாநாட்டில் அதிமுகவினர் பங்கேற்றது தான் எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.

தமிழகத்தின் பெருந்தலைவர்களான அண்ணாவை விமர்சித்திருந்தாலும், பெரியாரை விமர்சித்திருந்தாலும் சரி தேர்தல் ஆதாயம் கருதி பாஜகவுடன் தான் கூட்டணி அமைப்போம் என அதிமுக இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

இதுகுறித்து அதிமுகவினர் சிந்தித்து செயல்பட வேண்டும். அவர்களோடு இனியும் சேர்ந்து பயணிக்க போகிறார்களா? என்பதை தமிழக மக்களுக்கு பதிலளிக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.