மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் மும்ரா பகுதியில் 31 வயது நபர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் 25 வயதான தனது மனைவியை “முத்தலாக்” மூலம் திருமணத்திலிருந்து விடுபடுவதாக இளம் பெண்ணின் தந்தைக்கு தெரிவித்துள்ளார். தனியாக நடை பயிற்சி செய்வதால் திருமண ரத்து செய்வதாக கூறியதால் இளம்பெண்ணின் தந்தை அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் “முத்தலாக்” தடை சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில், இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த இளம் பெண்ணின் கணவர் மீது முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இளம்பெண்ணின் கணவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.