
தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 2000- க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல் குமார் என முக்கிய கட்சியின் நிர்வாகிகள் உரையாற்றிய பிறகு தவெக தலைவர் விஜய் பேசினார்.
அப்போது தமிழ்நாட்டு முதலமைச்சர் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டவர்களின் பெயர்களை வெளிப்படையாக குறிப்பிட்டு கடுமையாக விமர்சனம் செய்தார். இவரது பேச்சுக்கு நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர். இவர் தனது உரையை முடிக்கும் போது ஆங்கில வரிகளை மேற்கோள் காட்டியதோடு, திருக்குறள் ஒன்றைக் கூறியும் உரையை முடித்தார். இதுதான் தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது.
அதாவது ‘Men may come and men may go but I go on forever’ என்ற william Blake எழுதிய கவிதையோடு தனது உரையையும் முடிப்பதாக கூறினார். ஆனால் இந்த வரிகள் william Blake எழுதியது கிடையாது, Alfred Lord Tennyson என்பவர் தான் எழுதியுள்ளார். இதை தவறுதலாக அவர் மாற்றி கூறியுள்ளார். அரசியலில் மக்களுக்காக நான் என்றென்றும் இருப்பேன். வந்தேன் போனேன் என்றில்லாமல் எப்பொழுதும் அவர்களின் நலனுக்காக குரல் கொடுப்பேன். அடுத்த தேர்தலில் இதுவரை மக்கள் சந்திக்காத பல வரலாற்று மாற்றங்களை தனது கட்சி ஏற்படுத்த வேண்டும் என்று அவர் உறுதியோடு இருப்பதாக தெரிவித்தார்.
அதை தொடர்ந்து ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாய் செயின்- குரல் 484 என்று திருக்குறளையும் குறிப்பிட்டு தனது உரையை அவர் முடித்தார். ஒரு செயலை செய்ய தேவையான காலம், இடம் ஆகிய இரண்டையும் கருதி செயல்பட்டால் எத்தகைய பெரிய காரியத்தை செய்தாலும் இருந்தாலும் அது கைகூடும் என்பதே இதன் பொருளாகும். இதையும் தனது அரசியல் பயணத்தை மனதில் வைத்து விஜய் பேசியுள்ளார்.