
இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து வாங்குவது சகஜமாகிவிட்டது. இதுபோன்று ஆர்டர் செய்து வாங்கும் உணவுகளில் பல மோசமான அனுபவத்தை தருகின்றன. இதே போல் ஆஸ்திரேலியா பெண்மணி எமிலி என்பவர் தனக்கு ஆன்லைன் ஆர்டர் மூலம் நடந்த மோசமான அனுபவத்தை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எமிலி ஒரு முறை சிக்கன் ராப் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அதனை ஆசையுடன் வாங்கி ஆர்வமாக சாப்பிட ஆரம்பித்துள்ளார். அப்போது ஏதோ கடினமான பொருள் ஒன்று பல்லில் தட்டுப்படுவதாக தோன்றியுள்ளது.
அது வெறும் கேரட் துண்டுகளாக இருக்கலாம் என நினைத்து மீண்டும் ஒருமுறை கடித்துள்ளார் அது மிகவும் கடினமாக இருந்ததால் கடிக்க முடியவில்லை. உடனே எமிலி அதனை எடுத்துப் சிக்கன் ரேப்பை பிரித்துப் பார்த்துள்ளார். அதனுள் ஆரஞ்சு நிற கைப்பிடியுடன் கத்தி ஒன்று இருந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக கத்தியின் முனை திருப்பி இருந்ததால் காயம் எதுவும் எமிலிக்கு ஏற்படவில்லை. இதனை வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரும் அந்த உணவு நிறுவனத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram