நேபாளத்தில் கடந்த மாதம் 15ம் தேதி எட்டி விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று தரையிறங்க முயற்சி செய்தபோது கீழே விழுந்து நொறுங்கி தீ பிடித்தது. இவ்விபத்தில் இந்தியர்கள் உட்பட 72 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேபாளத்தில் கடந்த மாதம் 15ஆம் தேதி ஏற்பட்ட விமான விபத்தில் மனித தவறு இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது. 72 பேர் உயிரிழந்த இந்த விமான விபத்தில் முதற்கட்ட விசாரணையில் எஞ்சின் கோளாறு இருப்பதாக கூறப்பட்டது. தற்போது இவ்வழக்கை விசாரித்து வரும் 5 பேர் கொண்ட குழுவில் ஒருவர், விமான விபத்தில் மனித தவறு இருப்பதற்கான காரணியை மறுக்க முடியாது என கூறியுள்ளார்.