சசி டைரக்டில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் சென்ற 2016-ம் வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமின்றி இயக்கியும் வருகிறார். பிச்சைக்காரன் -2 படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில் பிச்சைக்காரன் -2 படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என மாங்காடு மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜகணபதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

அதில், நான் தயாரித்த “ஆய்வுகூடம்” படத்தின் கருவையும், வசனத்தையும் பயன்படுத்தி பிச்சைக்காரன்-2 எடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே எனக்கு 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக கொடுத்த பிறகே படத்தை வெளியிட வேண்டும் என்று கூறியிருக்கிறார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இதுகுறித்து விளக்கமளிக்குமாறு விஜய் ஆண்டனிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை வரும் 12ம் தேதிக்கு தள்ளி வைத்தது.