தமிழ் சினிமாவில் பொல்லாதவன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன் பிறகு தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக விடுதலை திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இதன் இரண்டாம் பாகம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இயக்குனர் வெற்றி மாறன் தற்போது சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.

நடிகர் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம் தொடங்கிய நிலையில் காயம் காரணமாக சூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது வாடிவாசல் படத்திற்காக இயக்குனர் வெற்றிமாறன் லண்டன் சென்றுள்ளார். அதாவது இப்படத்தில் இடம்பெறும் ஜல்லிக்கட்டு காட்சிகளை பிரமாண்டமாக காட்ட VFX தொழில்நுட்ப கலைஞர்களை சந்திப்பதற்காக வெற்றிமாறன் லண்டன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் வெற்றிமாறன் லண்டன் செல்வதற்காக ஏர்போர்ட்டுக்கு சென்ற புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.