ஏப்ரல் 3 கிரிகோரியன் ஆண்டின் 93 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 94 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 272 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

801 – பிரான்சிய மன்னர் லூயி பயசு மன்னர் பார்செலோனாவை பல ஆண்டுகள் முற்றுகையின் பின்னர் முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினார்.

1505 – இலங்கையில் முதன் முதலாகப் போர்த்துக்கீசர் வந்திறங்கினர்.[1]

1834 – கிரேக்க விடுதலைப் போரின் தளபதிகள் நாட்டுத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டார்கள்.

1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைநகர் ரிச்மண்ட் நகரைக் கைப்பற்றினர்.

1885 – விசைப்பொறிகளின் வடிவமைப்புக்கான செருமனியக் காப்புரிமத்தை காட்லீப் டைம்லர் பெற்றார்.

1888 – இலண்டன் ஈஸ்ட் என்ட் பகுதியில் பதினொரு பெண்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள்.

1895 – ஆஸ்கார் வைல்டு தாக்கல் செய்த அவதூறு வழக்கு விசாரணை ஆரம்பமானது, இறுதியில் தற்பால்சேர்க்கை குற்றத்திற்காக அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

1917 – வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்த விளாதிமிர் லெனின் உருசியா திரும்பினார்.

1922 – ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதற் பொதுச் செயலாளரானார்.

1933 – நாட்சி செருமனியில் யூதர்களின் வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கை வெற்றி பெறவில்லை.

1942 – இரண்டாம் உலகப் போர்: பட்டான் தீபகற்பத்தில் சப்பானியப் படை அமெரிக்க மற்றும் பிலிப்பீன்சு படையினர் மீது தாக்குதலை ஆரம்பித்தது.

1948 – பனிப்போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் 16 நாடுகளுக்கு $5 பில்லியன் உதவித்தொகை வழங்கும் உத்தரவில் கையொப்பமிட்டார்.

1948 – தென் கொரியாவில் ஜேஜு என்ற இடத்தில் மனித உரிமை மீறல் மற்றும் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.

1958 – பிடெல் காஸ்ட்ரோவின் புரட்சி இராணுவம் அவானா மீது தாக்குதல் தொடுத்தது.

1966 – சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தை அடைந்தது. பூமியை விட வேறொரு விண் பொருளைச் சுற்ற ஆரம்பித்த முதலாவது விண்கலம் இதுவாகும்.

1973 – உலகின் முதலாவது நகர்பேசி அழைப்பை நியூயோர்க் நகரில் மோட்டோரோலா நிறுவனத்தின் மார்ட்டின் கூப்பர் பெல் ஆய்வுகூடத்தின் ஜொயெல் ஏங்கல் என்பவருக்கு மேற்கொண்டார்.

1974 – 13 அமெரிக்க மாநிலங்களில் ஆரம்பித்த கடும் சூறாவளி காரணமாக 315 பேர் உயிரிழந்தனர். 5,500 பேர் வரையில் காயமடைந்தனர்.

1975 – அமெரிக்காவின் பாபி ஃபிஷர் அனதோலி கார்ப்பொவ்வுடன் சதுரங்கப் போட்டியில் பங்குபற்ற மறுத்ததால் கார்ப்பொவ் உலக வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டார்.

1981 – உலகின் முதலாவது பெயரத்தகு கணினி “ஒஸ்போர்ன் 1” சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1982 – போக்லாந்து தீவுகளை ஆர்ஜெண்டீனாவிடம் இருந்து மீளப் பெறும் முகாமாக பிரித்தானியா தனது கடற்படையை அங்கு அனுப்பியது.

1996 – ஐக்கிய அமெரிக்காவின் வான்படை விமானம் ஒன்று குரோவாசியாவில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அமெரிக்க அரசின் வணிக செயலாளர் ரொன் பிரௌன் உட்பட 35 பேர் உயிரிழந்தனர்.

1997 – அல்ஜீரியாவில் தாலித் என்ற கிராமத்தில் 52 பொதுமக்கள் ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.

2004 – 2004 மத்ரித் தொடருந்து குண்டுத்தாக்குதல்களில் ஈடுபட்ட இசுலாமியத் தீவிரவாதிகள் காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

2009 – நியூயார்க்கில் பிங்காம்ப்டன் என்ற இடத்தில் இடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

2010 – ஆப்பிள் நிறுவனம் 1-வது தலைமுறை ஐ-பேடு கைக் கணினியை வெளியிட்டது.

2016 – 214,488 வணிக நிறுவனங்களின் தகவல்கள் அடங்கிய பனாமா ஆவணங்கள் வெளியிடப்பட்டது.

2017 – உருசியாவில் சென் பீட்டர்ஸ்பேர்க் சுரங்கத் தொடருந்தில் குண்டு வெடித்ததில் 14 பேர் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்தனர்.

2018 – கலிபோர்னியா, சான் புரூனோ நகரில் உள்ள யூடியூப் தலைமையலுவலகத்தில் பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் நால்வர் காயமடைந்தனர். துப்பாக்கிதாரி தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இன்றைய தின பிறப்புகள்

1781 – சுவாமிநாராயண், இந்திய மதகுரு (இ. 1830)

1783 – வாசிங்டன் இர்விங், அமெரிக்க எழுத்தாளர், வரலாற்றாளர் (இ. 1859)

1841 – எர்மன் கார்ல் வோகல், செருமானிய வானியற்பியலாளர் (இ. 1907)

1903 – கமலாதேவி சட்டோபாத்யாய், இந்திய சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1988)

1904 – ராம்நாத் கோயங்கா, இந்தியப் பத்திரிகையாளர் (இ. 1991)

1907 – சிதம்பரநாதன் செட்டியார், தமிழகத் தமிழறிஞர், மொழியியலாளர் (இ. 1967)

1914 – சாம் மானேக்சா, இந்தியப் படைத்துறை உயர் தளபதி (இ. 2008)

1924 – மார்லன் பிராண்டோ, அமெரிக்க நடிகர் (இ. 2004)

1929 – பச்லுர் ரகுமான் கான், வங்காளதேசக் கட்டிடக் கலைஞர் (இ. 1982)

1930 – எல்முட் கோல், செருமனிய அரசுத்தலைவர் (இ. 2017)

1934 – குட்டால், ஆங்கிலேய முதனியியலாளர், மானிடவியலாளர்

1949 – ராம நாராயணன், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (இ. 2014)

1950 – இந்திரஜித் குமாரசுவாமி, இலங்கைத் தமிழ் பொருளியலாளர், மத்திய வங்கி ஆளுநர்

1951 – பூ. செந்தூர் பாண்டியன், தமிழக அரசியல்வாதி (இ. 2015)

1954 – க. கிருஷ்ணசாமி, இந்திய மருத்துவர், அரசியல்வாதி

1955 – அரிகரன், இந்தியப் பாடகர்

1956 – மோகன் ராமன், இந்தியத் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்

1961 – எடி மர்பி, அமெரிக்க நடிகர்

1962 – ஜெயபிரதா, இந்திய நடிகை, அரசியல்வாதி

1973 – ஆடம் ஸ்காட், அமெரிக்க நடிகர்

1973 – பிரபுதேவா, தென்னிந்திய நடிகர், நடன அமைப்பாளர்

1976 – உல்ரிகா பாபியாகோவா, சுலோவாக்கிய வானியலாளர், சிறுகோள் கண்டுபிடிப்பாளர் (இ. 2002)

1982 – கோபி ஸ்மல்டேர்ஸ், கனடிய நடிகை

1983 – சிரேயா ரெட்டி, தென்னிந்திய நடிகை

1986 – அமாண்டா பைன்ஸ், அமெரிக்க நடிகை

இன்றைய தின இறப்புகள்

1325 – ஹசரத் நிஜாமுதீன், சூஃபி அறிஞர் (பி. 1238)

1680 – சிவாஜி, மராட்டியப் பேரரசர் (இ. 1630)

1897 – ஜொகான்னெஸ் பிராம்ஸ், செருமானிய இசையமைப்பாளர் (பி. 1833)

1981 – ஔவை துரைசாமி, தமிழகத் தமிழறிஞர் (பி. 1903)

1991 – கிரஃகாம் கிரீன், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1904)

1992 – எஸ். எஸ். ராமசாமி, தமிழக அரசியல்வாதி (பி. 1918)

1998 – மேரி கார்ட்ரைட், ஆங்கிலேயக் கணிதவியலாளர் (பி. 1900)

2013 – ரூத் பிராவர் ஜாப்வாலா, செருமானிய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1927)

2017 – கிஷோரி அமோன்கர், இந்தியப் பாடகர் (பி. 1931)