தமிழ் சினிமாவில் சதீஷ் நடித்த நாய் சேகர் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் பவித்ரா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். மலையாள சினிமாவிலும் நடிகை பவித்ரா நடித்து வரும் நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் தன் வாழ்வில் நடந்த மிகவும் மோசமான சம்பவம் குறித்து பேசி உள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, எனக்கு சிறுவயதில் இருந்து படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது.

ஆனால் என் அம்மாவிற்கு இது பிடிக்காது. என் அம்மா நன்றாக படிக்க வேண்டும் என்று கூறுவார். நானும் என் அம்மா படுகின்ற கஷ்டத்தை பார்த்து நன்றாக படித்தேன். நான் சென்னைக்கு வந்த போது எதிர்பாராத விதமாக ஒரு விபத்து நடந்து விட்டது. அந்த விபத்தில் என்னுடைய முகம் மற்றும் கால்களில் மோசமாக அடிபட்டு இருந்தது. என்னுடைய முகத்தில் ஆபரேஷன் நடந்த பிறகு முகத்தை கண்ணாடியில் கூட பார்க்க முடியவில்லை. ஆரம்பத்தில் இந்த விபத்து குறித்து நான் என் அம்மாவிடம் கூறவில்லை என்று கூறியுள்ளார். மேலும் பவித்ராவின் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.