தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் பாரதிராஜா. இவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் தற்போது கருமேகங்கள் கலைகின்றது என்ற படத்தில் பாரதிராஜா நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா மீண்டும் படம் இயக்கப் போவதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தை இயக்கி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தேனி பின்னணியில் உருவாகும் இந்த படத்திற்கு தாய்மெய் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.